நவம்பர் 20, 2022

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்

 

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு விவரம் இதோ


ஆர்யா இதுவரை நடித்த திரைப்படங்கள் 

 

ஜீவா இதுவரை நடித்த திரைப்படங்கள்

 

த்ரிஷா இதுவரை நடித்த திரைப்படங்கள்

 

விஜய் சேதுபதி இதுவரை நடித்த திரைப்படங்கள்

 

கார்த்தி இதுவரை நடித்த திரைப்படங்கள்

 

சிம்பு இதுவரை நடித்த திரைப்படங்கள்

 

நயன்தாரா இதுவரை நடித்துள்ள திரைப்படங்கள்

 

Ajith Filmography: தல அஜித் இதுவரை நடித்த திரைப்படங்கள்

 

Vijay Filmography: விஜய் இதுவரை நடித்த திரைப்படங்கள்

 

சூர்யா இதுவரை நடித்த திரைப்படங்கள் 1997 - 2023

 

சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போன 5 வாரிசு நடிகர்கள்


செப்டம்பர் 14, 2021

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நமக்கு காய்ச்சல், இருமல், சளி, போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வருவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் இருக்கக்கூடிய மாற்றங்கள் சீக்கிரமே நம்மை நோய் தொற்றுக்கு ஆளாக்கி விடுகின்றது. அதுவும் இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் நோய் கிருமிகள் நம்மை சுலபமாக எளிதாக தாக்கி விடுகின்றது. நோய்க் கிருமிகளிடமிருந்து, நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் சுலபமான முறையில் என்ன செய்யலாம். ஒரு டம்ளர் பசும்பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து காய்ச்சி குடித்தாலே போதும்.

milk1

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய டம்ளர் அளவு பசும்பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். 200ml அளவு பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 வெள்ளைப்பூண்டை தட்டி போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், சுக்கு 1/4 ஸ்பூன், இந்த மூன்று பொடியையும் சேர்த்து பாலை நன்றாக கலந்து விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

தேவைப்பட்டால் இதை வடிகட்டி குடிக்கலாம். அப்படியேவும் குடிக்க முடியும் என்று நினைப்பவர்கள் இதை ஒரு டம்ளரில் ஊற்றி நாட்டுசர்க்கரை 1 ஸ்பூன் அல்லது தேன் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து விட வேண்டும். இனிப்பு உடம்பிற்கு சேராது என்று நினைப்பவர்கள் எதுவுமே போடாமல் வெறும் பாலை குடித்தாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். இதில் போட்ட பூண்டை தூக்கி வீணாக கீழே போடாமல் அப்படியே மென்று சாப்பிட்டு விடலாம்.

poondu

ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கூட இந்த பாலை வடிகட்டிக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு 50ml அவர்களுக்கு இந்தப் பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை பசும்பாலை பயன்படுத்துவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ காபிக்கு பதிலாக இந்த பாலை குடிக்க வேண்டும். முடிந்தால் மாலை 5 மணி அளவில் ஒரு டம்ளர் இந்த மாதிரி பாலை காய்ச்சி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை.


இன்றைய சூழ்நிலையில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய இந்த பால், நாம் அனைவருக்கும் தேவை. நுரையீரல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க, சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, இப்படியாக பல உடல் உபாதைகளுக்கு தீர்வை கொடுக்கக் கூடிய சக்தி இந்த ஒரு டம்ளர் பாலுக்கு உண்டு.

milk1

எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.


இத மட்டும் ஒருவாட்டி குடிச்சுப் பாருங்க! இனி டீ காஃபியை உங்கள் கையால் கூட தொட்டு பாக்க மாட்டீங்க!

இத மட்டும் ஒருவாட்டி குடிச்சுப் பாருங்க! இனி டீ காஃபியை உங்கள் கையால் கூட தொட்டு பாக்க மாட்டீங்க!

அன்றாடம் காலை மாலை இரு வேலையும் டீ காஃபிக்கு பதிலாக கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய உடலுக்கு நன்மை சேர்க்கும் இந்த காஃபிய ஒருவாட்டி போட்டு குடிச்சு பாருங்க! உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அஜீரணத்தை சீர்படுத்தும். தேவையற்ற பக்கவிளைவுகளும் ஏற்படாது. இன்றைய சூழ்நிலைக்கு இந்த காபி மிக மிக நல்லது. அது எந்த காஃபின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? அது என்ன காபி? அந்த காஃபியை நம் வீட்டில் எப்படி போடுவது என்று இப்போதே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் போட்டு குடித்து வந்த மல்லி காஃபி தான் அது. இந்த காஃபியை முறைப்படி சுவையாக எப்படி போடுவது? 2 கப் அளவு கொத்தமல்லி காஃபி யை தயார் செய்ய தேவையான பொருட்கள். வரமல்லி – 2 ஸ்பூன், இஞ்சி – 2 சிறிய துண்டுகள், ஏலக்காய் – 2, நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்.

முதலில் ஒரு சிறிய உரலில் இஞ்சியை போட்டு நன்றாக இடித்து ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு வர மல்லி சேர்த்து ஒன்றும் இரண்டுமாக கொரகொரப்பாக இடித்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 ஏலக்காய்களையும் அந்த சிறிய உரலில் போட்டு நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (தேவைப்பட்டால் வர மல்லியை சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.)

milk-boiling-stove

தண்ணீர் சேர்க்காமல் பாலை கொஞ்சம் சூடு படுத்தி அப்படியே ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.


அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, வரமல்லி, ஏலக்காய் இந்த 3 பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். 5 நிமிடங்கள் வரை இந்த தண்ணீர் மிதமான தீயில் கொதிக்க வேண்டும். இதில் சேர்த்திருக்கும் மூன்று பொருட்களில் சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். இறுதியாக 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையையும் இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கரைத்து விடுங்கள்.

malli-coffee1

இந்த தண்ணீர் நன்றாக 5 நிமிடம் கொதித்தவுடன் ஒரு வடிகட்டியில், வடிகட்டி தண்ணீரை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பால் சேர்க்காமல் இந்தத் தண்ணீரை அப்படியே பருகினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். இதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையை சேர்க்க காய்ச்சிய பாலை ஊற்றி கலந்து பரிமாறினால் சூப்பரான வர மல்லி காபி ரெடி.

malli-coffee2

கமகம வாசத்தோடு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த காபியை நிச்சயமாக உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். ஜீரண சக்தியை அதிகப்படுத்த, சளி வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உங்க வீட்லயும் நாளையிலிருந்து இந்த காபிய போட்டு குடிச்சாலே போதும்.


வெறும் 10 நாட்களில் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல், உடல் எடையை குறைக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? 1 ஸ்பூன் இந்தப் பொடியை சாப்பிட்டாலே போதும்.

வெறும் 10 நாட்களில் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல், உடல் எடையை குறைக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? 1 ஸ்பூன் இந்தப் பொடியை சாப்பிட்டாலே போதும்.

நிறைய பேர் இன்று அதிகப்படியான உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு செயற்கையாக எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் எதிர்காலத்தில் நமக்கு பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். இயற்கையான முறையில், இயற்கையாக விளையக்கூடிய பொருட்களை வைத்து நம் உடலில் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாமல் மிக மிக சுலபமாக, உடல் எடையை குறைக்க உங்களுக்காக, ஒரு வழி இந்த குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழியை தாராளமாக பின்பற்றலாம்.

kodampuli

உடல் எடையை குறைப்பதற்கு, நாம் ஒரு பொடியை தயார் செய்யப் போகின்றோம். அதற்குத் தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். கொடம் புளி – 50 கிராம், சோம்பு – 50 கிராம், சீரகம் – 25 கிராம், ஆளி விதை  – 50 கிராம், காய்ந்த கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு.

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொடம்புளியை போட்டு இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் சூடுபடுத்தி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அதே கடாயில் சோம்பு, சீரகம், ஆளிவிதை, காய்ந்த கறிவேப்பிலை இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2 நிமிடங்கள் வாசம் வரும் வரை வறுத்து எடுத்து நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.

aali-vithai

இதனுடன் வறுத்து வைத்த கொடம் புளி யையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு தேவையான பொடி மிக மிக சுலபமான முறையில் தயார். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடி வைத்துவிட்டால், இரண்டு மாதங்கள் வரைகூட கெட்டுப் போகாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் கூட வைக்க வேண்டாம்.


தினமும் இரவு சாப்பாட்டை சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பாக இந்தப் பொடியை சாப்பிட வேண்டும். 1 ஸ்பூன் அளவு இந்தப் பொடியுடன், 1/2 ஸ்பூன் தேன் கலந்து அப்படியே சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் 1 டம்ளர் அளவு தண்ணீரில் இந்தப் பொடியைப் போட்டு கலந்து அப்படியேவும் குடித்துக் கொள்ளலாம்.

weight-loss

இரவு நேரத்தில் இதை குடிக்க முடியாதவர்கள் காலை உணவு சாப்பிட்ட பின்பு, ஒரு மணி நேரம் கழித்தும் இந்த பொடியை சாப்பிட்டு வரலாம். முறையான சாப்பாட்டுடன், இந்தப் பொடியை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தாலே உங்களுடைய உடல் எடையில் நல்ல வித்தியாசம் தெரியும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள். பக்க விளைவுகள் ஏற்படாமல் இயற்கையான முறையில் உங்கள் எடையை குறைக்க இதுவும் ஒரு சிறந்த வழிதான்.

வெறும் 7 நாட்களில் கால்சியம் குறைபாட்டை சரி செய்ய, ஆயுசுக்கும் மூட்டு வலியில் இருந்து தப்பித்துக்கொள்ள, தினமும் ஒரு டம்ளர் இந்த பாலை குடிச்சுட்டு வாங்க!

வெறும் 7 நாட்களில் கால்சியம் குறைபாட்டை சரி செய்ய, ஆயுசுக்கும் மூட்டு வலியில் இருந்து தப்பித்துக்கொள்ள, தினமும் ஒரு டம்ளர் இந்த பாலை குடிச்சுட்டு வாங்க!

நம்முடைய உடல் ஆரோக்கிய குறைபாட்டிற்கு முதல் காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் தான். வெறும் அரிசியை கொண்டு செய்யக்கூடிய பொருட்களைத்தான் தினசரி சாப்பாட்டில் சேர்த்துக் கொள்கின்றோம். ஆனால் தானிய வகைகளில் தான் அதிகப்படியான கால்சியம் சத்து இருக்கின்றது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் தாத்தாக்கள் கேழ்வரகு கம்பு தினை போன்ற தானிய உணவுகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட காரணத்தால் தான், 80 வயதைக் கடந்தாலும், மூட்டு வலி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். இப்போது முப்பது வயதை கடக்கும் போதே நமக்கு மூட்டுவலி வருகின்றது. இந்த மூட்டு வலியிலிருந்து தப்பிக்க எலும்புகளை உறுதிப்படுத்த என்னதான் செய்வது.

backbonepain

இந்த சத்து நிறைந்த பாலை குடித்தால், கால்சியம் குறைபாடட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இந்த பாலை தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் நாம் பார்த்து விடுவோம். கேழ்வரகு மாவு – 250 கிராம், கருப்பு எள்ளு – 50 கிராம், சோம்பு – 2 டேபிள்ஸ்பூன், கற்கண்டு – 50 கிராம்.

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எள் கடாயில் கொட்டிய உடன், பட் பட் என வெடிக்க தொடங்கும். அது வரை வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளு கருகி விடக்கூடாது.

ragi 1

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.


இந்தப் பொடியை தினசரி எப்படி பாலுடன் கலந்து குடிப்பது? பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விடவேண்டியது தான்.

ellu 1-compressed

இந்தப் பவுடரை தண்ணீரில் கலக்காமல் நேரடியாக சூடான பாலில் போட்டால் கட்டிப்பிடிக்கும். நன்றாக கலக்க முடியாது என்பதால்தான் கொஞ்சமாக பச்சை தண்ணீரில் இந்த பொடியை கலந்து, சூடான பாலில் ஊற்றி கலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் காலையில் காபி டீயை தவிர்த்துவிட்டு இந்த பாலை குடிப்பது நல்லது.

milk4

சோம்பு வாசம் பிடிக்காதவர்கள் சோப்புக்கு பதிலாக ஏலக்காய்களை சேர்த்துக் கொள்ளலாம். கற்கண்டு வேண்டாம் என்பவர்கள் அதை தவிர்த்து விட்டு அதற்குப் பதில் பாலில் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து கூட இந்த பாலை குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பே சேர்க்காமலும் இந்த பாலை பருகலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உடலில் இருக்கும் கால்சியம் சத்துக் குறைபாட்டை சீக்கிரமே சரி செய்ய இந்த பால் உதவியாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வரும் நெஞ்சு சளி, வரட்டு இருமல், மூக்கடைப்பு பிரச்சனைகள் அனைத்தையும் 3 நாட்களில் சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வரும் நெஞ்சு சளி, வரட்டு இருமல், மூக்கடைப்பு பிரச்சனைகள் அனைத்தையும் 3 நாட்களில் சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.

நீண்ட நாட்களாக ஒருவருக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், அதுவே பிற்காலத்தில் சைனஸ் ஆஸ்துமா போன்ற பல பிரச்சினைகள் வருவதற்கு காரணமாக மாறி விடும். முடிந்தவரை நெஞ்சு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் நல்லது. எவ்வளவுதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகத சளி கூட, சில கை வைத்தியங்களில் குணமாகிவிடும். அப்படிப்பட்ட ஒரு கை வைத்தியத்தை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை எடுத்து ஒரு கசாயத்தை தயார் செய்யப் போகின்றோம். இந்த கஷாயத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல வித்தியாசம் தெரியும்.

karpuravalli 1

கசாயம் செய்ய தேவையான பொருட்கள். கற்பூரவள்ளி இலை – 2, கருஞ் சீரகம் – 1/4 ஸ்பூன், அரிசி திப்பிலி – 2, மிளகு – 5. இந்தப் பொருட்களுக்கு 100 ml அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.

கற்பூரவல்லி இலைகளை உங்கள் கையாலேயே சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். அரிசித் திப்பிலி, மிளகு இந்த 2 பொருளை மட்டும் ஒரு சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கிழித்த கற்பூரவள்ளி இலைகளையும், இடித்து வைத்திருக்கும் அரிசித்திப்பிலி மிளகையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து மிதமான தீயில் இந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

Milagu benefits in Tamil

இந்த தண்ணீர் சுண்டும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் இந்த பொருட்கள் தண்ணீர் கொதித்தாலே போதும். அதன் பின்பு ஒரு வழிகாட்டியின் மூலம், வடிகட்டி அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். இனிப்பு சுவைக்காக தேன் நாட்டு சர்க்கரை எல்லாம் கலந்து குடிக்கக் கூடாது.


கர்ப்பிணி பெண்கள் இதை கட்டாயம் குடிக்க கூடாது. மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்களும் இதை குடிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு சளியுடன் சேர்ந்த வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் இதே கசாயத்தில் ஐந்து வேப்ப இலைகளை போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை சங்கடையில் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை கொடுக்கும் பட்சத்தில் சளி தொந்தரவிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். தொடர்ந்து 3 நாட்கள் கொடுக்க வேண்டும்.

kasayam1

பெரியவர்களாக இருந்தால் 100ml தண்ணீரை கொதிக்கவைத்து அப்படியே குடிக்கலாம். 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சங்கடையில் 3 சாங்கடைகள் வரை கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கும். நுரையீரலில் சளி இருந்தாலும் அது நிச்சயமாக வெளியேறிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.


5 நிமிடத்தில் உங்கள் முகம் ஒரிஜினல் கலருக்கு மாற இப்படி மட்டும் செய்தால் போதுமே!

5 நிமிடத்தில் உங்கள் முகம் ஒரிஜினல் கலருக்கு மாற இப்படி மட்டும் செய்தால் போதுமே!

எல்லோருடைய முகமும் இயற்கையாக ஒரு நிறத்திலும், போகப் போக சுற்றுச்சூழல் காரணமாக ஒரு நிறத்திலும் மாறக்கூடும். சிலருக்கு உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும் ஆனால் முகம், கை, கால்கள் கருத்த நிறத்தில் இருக்கும். இவர்களுடைய இயற்கை நிறம் பெறுவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. வெயிலின் தாக்கத்தினால் அதுபோல் நம்முடைய சுய நிறம் மங்கிப் போய் விடுகிறது. இதிலிருந்து ஐந்தே நிமிடத்தில் எப்படி மீள்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

face0

நீங்கள் திடீரென வெளியே எங்காவது செல்ல வேண்டும் என்றாலோ அல்லது விசேஷ, விழாக்கள் என்று கலந்து கொள்ள நினைக்கும் பொழுது சட்டென இதை செய்து விட்டு அதன் பிறகு வழக்கமான மேக்கப் போட்டால் அவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? இதற்கு அதிக செலவு கூட செய்ய தேவை இல்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். இந்த பொருட்கள் எப்போதும் வீட்டில் நிச்சயம் இருக்கும். இப்படி எளிதாக கிடைக்கக் கூடிய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஐந்து நிமிடத்தில் முகத்தில் இருக்கும் மாசு, தூசிகளை நீக்கி பொலிவான தோற்றத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதை செய்ய தேவையான பொருட்கள்: ஒரு தக்காளி பழம், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை அவ்வளவு தாங்க.

முதலில் தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பகுதியை மட்டும் நன்கு கத்தி அல்லது ஸ்பூன் கொண்டு கீறிக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் உள்ளே இருக்கும் ஜூஸ் நமக்கு கிடைக்கும். அதன் மீது மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது மூடியை அப்படியே முகத்தின் மீது வைத்து கிளாக் மற்றும் ஆன்டி க்ளாக் வைஸ் முன்புறமும், பின்புறமும் நன்கு சுற்றி எடுக்க வேண்டும்.

tomato

ஒரு 2 நிமிடம் வரை இப்படியே செய்து கொண்டிருங்கள். இதை செய்யும் பொழுது மஞ்சளில் இருக்கும் மூலக்கூறுகள் முகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், தூசிகள், நுண்கிருமிகள் அத்தனையும் வெளியாகி விட்டிருக்கும். அதன் பிறகு மீதி இருக்கும் இன்னொரு பழத்தின் மூடியை எடுத்து இதே போல ஸ்பூன் அல்லது கத்திக் எடுத்துக் கீறிக் கொள்ளுங்கள். தக்காளி பழத்தில் இருக்கும் ஜூஸ் உடன் சேர்த்து எலுமிச்சைச் சாறு கலந்து கொள்ளுங்கள்.


அதில் சிறிதளவு சர்க்கரை போட்டு சர்க்கரை கரைவதற்குள் முகத்தில் இதே போல முன்புறமும், பின்புறமும் ஆக மாற்றி மாற்றி தேய்த்து முகம், நெற்றி, மூக்கு, தாடை ஆகிய பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும். சர்க்கரையில் இருக்கும் சொரசொரப்பு தன்மை ஸ்கிரப்பராக முகத்திற்கு வேலை செய்யும். எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரஸ் மற்றும் விட்டமின் சி முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, வறண்ட சருமத்தை ஈரப்பதமாக மிருதுவாக மாற்றும். மேலும் தக்காளி பழத்தில் இருக்கும் சாறு முகத்தை பொலிவாக்க செய்யும்.

tomato-with-sugar-on-face

இவை அனைத்தும் ஒன்று சேரும் பொழுது முகத்தில் திறந்து இருக்கும் துவாரங்கள் இறுக்கமடைந்து முக சுருக்கம் நீங்கும். பின்னர் முகத்தில் இருக்கும் சிறு சிறு வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று இருக்கும். முகப் பருக்கள் இருந்தாலும் அவற்றில் இருக்கும் கிருமிகளை அழித்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இப்படி செய்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு பின்னர் சாதாரணமாக நீங்கள் அலங்காரம் செய்து கொண்டால் கூட முன்பு இருந்ததை விட பளிச்சென்று வெண்மையாக நல்ல கலராக மாறி இருப்பீர்கள்.


Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...