தேங்காய்க் கஞ்சி
தேவையானவை:
அரிசி - ஓர் ஆழாக்கு,
உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி,
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்,
பால் - ஒரு கப்.
செய்முறை:
அரிசியை ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். கசகசாவைப் பொடி செய்துகொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். ஊறிய அரிசியைத் தண்ணீரோடு அதில் சேர்த்து, வெயிட் போடாமல் கொதிக்கவைக்கவும். முக்கால் பாகம் வேகும்போது, வறுத்த உளுந்து சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இதில் தேங்காய், பொடித்த கசகசா, பால் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு குழைய எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது மாவடு தண்ணீர் ஜோராக இருக்கும.
மருத்துவப் பலன்கள்:
மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மூன்றும் சேர்ந்த, சரிநிகர் உணவு. எல்லோருக்குமே ஏற்றது என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக